மரத்தை நட்டுவிட்டு உயிர் சூழலை பாதுகாத்து விடலாம் என்று இயங்கி கொண்டு இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது... சிரிப்பதா அழுவதா என தெரிய வில்லை...
நடுக்கடலில் ஏது மரங்கள் - பாலை வனத்தில் ஏது மரங்கள்..
மீனவனோ ஒட்டகம் மேய்பவனோ oxygen cylinder ஏந்தியது உண்டா!?
ஆனால் டெல்லியில் ஏன் oxygen cylinderகளின் பயன்பாடு தேவைப்பட்டது...
நீரை உருவாக்க முடியாது... ஆனால் மாசு படுத்தி நாசம் செய்ய முடியும்... அதே போலத்தான் காற்றும் அதற்குள் இருக்கும் உயிரணுக்களும் உருவாக்க முடியாது.. நாம் மாசுபடுத்தி நாசம் செய்து வருகிறோம்.. மரம் வளர்த்தல் என்பது ஒரு வைத்தியம் .. அது தீர்வல்ல... தொழிற்சாலைகள் மீது மட்டுமா குற்றம்.. சொகுசாக வாழ்கிறேன் என்று காற்றை கெடுகின்ற ஒவ்வொரு குடும்ப தலைவன்,தலைவி,குழந்தைகள் என அனைவருமே பொறுப்பு.. நாம் மாற விட்டால் காற்று மாறிவிடும்... ஊழி அரங்கேறும்.. இதுவரை இந்த பூமி கண்டிராத ஒரு அழிவாக அது இருக்கும்..
ம.செந்தமிழன் உரைலிருந்து..